''ஆனா, இதையெல்லாம் உன்னிடம் பகிர்ந்துகொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை தீப்பும்மா!'' என்றான் இடைமறித்து. ''அப்படின்னா, என் அந்தரங்க மான விஷயங்கள் அத்தனையும் உன்னிடம் ஷேர் பண்ணிக்க ணும்னு எதிர்பார்க்கிறாயா டார்லிங்?'' ''அப்படி எதிர்பார்ப்பது தப்பா தீப்தி?'' அவனையும் அறியாமல் சின்னதொரு விவாதத்துக்கு இட் டுச்சென்றது அவனது உள்ளு ணர்வு. ''கல்யாணம் ஆகி உன்னுடன் எல்லாத்தையும் பகிர்ந்துகொண்டாலும், எனக்கென்று சில ரக சியங்கள் இருக்கலாம் இல்லையா நிக்?'' ''லைக் வாட் தீப்தி?'' பேச்சில் கொஞ்சமும் கோப உணர்வு தலையிடக் கூடாது என்று ஜாக்கிரதையுடன் தலையைப் பின்பக்கம் தள்ளி, இருக்கையில் நன்றாகச் சாய்ந்துகொண்டு நிதானமாக கேட்டான். ''உதாரணமா, எனக்கும் என் தங்கைக்கும் சில ரகசியங்கள் இருக்கலாம். எனக்கும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்களுக்கும்! ப்யூர்லி கேர்ள்ஸ் டாக். எங்கள் கணவர்கள் குறித்து, பழைய நண் பர்கள் குறித்து, பழைய சம்பவங்கள் குறித்து நாங்கள் விவாதிக்கிற சில விஷயங்கள் உனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை... இல்லையா ஹனி?'' ''கணவன் மனைவி உறவுக்கு என்று பிரத்யேகமாக எந்தப் புனிதத்துவமும் இல்லை என்கி றாய். அப்படித்தானே?'' ''தெலுங்குப் பட டயலாக்எல்லாம் பேசாதே நிக்கி! எனக்கு பிரத்யேகமாய், அந்தரங்கமான விஷயங்கள் இருக்கும் என்பதை நீ அங்கீகரிக்கணும். அது உன் னைப் பற்றியே இருந்தாலும், அதுபற்றி கவலைப்படாத பெருந்தன்மை உனக்கு இருக்கணும்!'' 'இது இங்கிலீஷ் பட டயலாக் மாதிரி இருக்கே?' என்று அவளுக் குப் பதில் சொல்லும்முன், தொலைபேசி ஒலித்தது. எடுத்து, ''வா, சுரேஷ்!'' என்றான். ஓர் இளைஞன் உள்ளே வந்து தீப்தியின் பக்கத்து நாற்காலியில் அமர்ந்து, சற்றே தயக்கத்துடன் நிகிலிடம் அன்றைய அலுவல் பற்றிப் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில், தீப்தி தீவிர யோச னையில் இருந்தாள். அவன் வெளியேறியதும் நிகில் மௌனமாக இருந்தான். ஆறு மாத உறவில் மணிக்கணக்காகப் பேசியபோது உணராத அவளின் இன்னொரு பரிமாணம் அந்தப் பத்து நிமிடங்களில் புலப்பட்டது போலிருந்தது. அவள் பிடிவாதத் தின் எல்லையைத் தொட்டுப் பார்த்துவிட வேண்டும். ''தீப்தி, உன் அந்தரங்கத்தை நான் மதிக்க வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது போல, என் மேல் நம்பிக்கை வைத்து நீ நடந்துக் கணும்னு நானும் எதிர்பார்க் கலாம் இல்லையா? டெலிட் செய்றேன்னு சொன்னப்புறமும் போகாமல் உன் கண் முன்னா டியே அதைச் செய்யணும்னு எதிர் பார்ப்பது என் மேல் நம்பிக்கை இல்லாததால்தானே?'' ''அது உன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை ஹனி! என் மனச் சமாதானத்துக்காக!'' ''அதில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறாய்?'' என்றான், அவள் கண்களைப் பார்க்காமல். அவனுள் பற்றி எரியும் ஆர்வத் தைக் கட்டுப்படுத்தி, மிக இயல்பாகக் கேட்பது போன்ற தோரணையைக் கொண்டுவர முயன்றான். ''இல்லை நிக்கி! அது எதுவா வேணாலும் இருக் கட்டும். அதைச் சொல்லச் சொல்லி என்னைக் கட்டா யப்படுத்தாதே!'' ''கட்டாயப்படுத்தவில்லை தீப்தி! நிர்மலாவுக்கு நீ எழுதி னதை நான் யதேச்சையா பார்த்தா என்ன ஆகிடப் போகுதுங்கறேன்? அதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகறே?'' என்று சிரித்தான். (சொல்லு, என்ன எழுதி யிருக்கே? என்னைப்பத்தி தானே? என்னைவிட நீ அதிகம் சம்பாதிப்பதையா? படுக்கையில் நான் உன்னை சந்தோஷப்படுத்தவில்லை என்றா? நிர்மலாவுக்கா அல்லது நிர்மல் குமாருக்கா?) ''நான் விவாதம் பண்ண விரும்பலை நிக்கி! அது உனக்கு எழுதினது இல்லை. அதனால் அதைப்பற்றி நீ தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமும் இல்லை!'' சலனமில்லாமல் சொன்ன அவளின் தீவிரம், அவனின் ஆணாதிக்க மனப்பான் மையை அசைத்து அறை கூவல் விடுத்தது. கெஞ்சிக் கூத்தாடிப் பெறுவாள் என்று நினைத்ததற்கு மாறாக அதட்டிக் கேட்கும் அவளது மனோபாவத்தை எப்படி எதிர்கொள்வது என்று தடுமாறினான். தார்மிக பலம் இல்லாத தன் எதிர்பார்ப்பில் தெரிந்துகொள்வதன் ஆர்வம் மட்டுமே மிஞ்சியிருக்க, அவளை வேறு ஆயுதத்தால் வெல்ல வேண்டியிருந்தது. ''உன் அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது என்பது நம் காதலைவிட முக்கியமா னதா?'' என்றான் மென்மை யான குரலில். காதல் என்கிற வார்த் தைப் பிரயோகத்தில் அவள் முகம் பிரகாசமானது. அது அவள் அதிகாரம் செலுத்தும் களம். தீ மூட்டவும், தாக்க வும், தணிக்கவும் பழகியிருந்த களம். அவன் தோற்றுப்போனதை உணர்ந்த வேகத் தில் கைகளை நீட்டி மேஜை மேலிருந்த அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள். அவனை ஆழமாகக் கண்ணுக்குள் பார்த்தாள். ''நீ என்ன நினைக் கிறேன்னு எனக்குத் தெரி யும். சத்தியமா உன்னைப் பத்தி அதில் ஒண்ணும் எழுதலை. என்னை நம்பு'' என்றாள். அவன் மனதில் நெருடிக்கொண்டு இருந்ததை அவள் போட்டுடைத்ததில், அவன் மௌனமானான். இதற்கு மேல் என்ன செய்வது? நாக ரிகம் கருதித் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டுமா? அவள் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ளும் காட்டுமிராண்டி மனப்பான்மையைக் கட்டுப்படுத்தி நடத் தையில் மேம்பட்டவனாக, நாசூக்கு நிறைந்தவனாக முகச் சாயம் பூசித்தான் ஆக வேண் டுமா? நிஜமாகவே அது நிர்மலா வுக்கு எழுதியதாக இருந்தால்? கடகடவென்று ஜிமெயில் தளத்தைக் கொணர்ந்தான். தன் பெயரை அடித்தான். பாஸ் வேர்டை அடிக்கும் முன் எழுந் தான். ''நீயே செய்... என் பாஸ் வேர்டு சொல்றேன்'' என்றான். தோற்றுப்போகும் முன் அவளைச் சங்கடப்படுத்தும் எண்ணம் மேலோங்கி நின்றது அவனுக்கு. அவள் மறுத்தும் அவளைப் பிடிவாதமாக உட்காரவைத்தான். பாஸ்வேர்டு சொன்னான். அவள் மௌனமாக விசை களை அழுத்தினாள். மின் அஞ்சல் உயிர் பெற்று வரிசைப்படுத்த, அதன் நடுவில் அவள் பெயர் பளிச்சென்று ஒளிர்ந்தது. அதன் பக்கவாட்டிலிருந்த கட்டத்தைக் கிளிக்கி குப்பைத்தொட்டிக்குத் தள்ளினாள். அவன் காத்திருந்தாற் போல, ''சந்தோஷமா?'' என்றான். அவளோடு ஒரு ஆயுசு பூரா வாழ்க்கை வாழ்ந்ததன் ஆயாசம் ஆட்கொண்டது. ''ஒரு நிமிஷம்'' என்றாள் அமைதியாய். குப்பைத் தொட்டியை கொட்டிக் காலியாக் கினாள் சர்வ ஜாக்கிரதையாய்! அவன் பின்னால் நிற்பது தீப் பிழம்பு போல அவள் முதுகில் சுட்டது. தன் மௌனத்தால் அவளை இன்னும் வருத்தினான். ''என் மேல் கோபம்தானே? எனக்குப் புரியுது'' என்றாள், அவனை ஏதாவது பேசவைக்கும் நோக்கத்துடன்! ''நாட் அட் ஆல்! நீ சொன்ன மாதிரி, அது எனக்கு எழுதப்பட வில்லை. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தார்மிக உரிமை எனக்கு இல்லை!'' தோல்வியை மறைத்துப் பாசாங் குடன் பெருந்தன்மையாகச் சொன்னான். ''நிர்மலாவுக்குக் கொஞ்சம் ப்ராப்ளம்ஸ். விவாகரத்து பத்தி யோசிச்சுட்டிருக்கா. அதைப்பத்தி நாங்கள் எழுதிக்கொண்ட மெயில் உன் ஐ.டிக்குப் போனது தெரிந்தாலே, அப்செட் ஆகிவிடு வாள்! அதுதான், நான்...'' பலமில்லாத வார்த்தைகளில் பேச ஆரம்பித்தவளைப் பாதியில் இடைமறித்தான்... ''அதான், எனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று சொன்னேனே..!'' (கடிதத்தை அழித்துவிட்ட தெம்பில் பொய் சொல்கிறாள்.) அவன் கையை இறுகப் பற்றி னாள். ''சரி, நான் கிளம்பறேன்... லேட் ஆயிடுச்சு!'' என்றாள். நகரில் புதிதாக ஓர் உணவு விடுதி திறந்திருப்பதாகவும், அந்த வார வெள்ளிக்கிழமை இரவு அங்கே போகலாம் என்றும் சொன் னாள். ''உத்தரவு மகாராணி! தாங்கள் சொல்லி நான் ஏதாவது செய் யாமல் இருந்திருக்கிறேனா?'' என்றான். அவனைச் செல்லமாக கன்னத்தில் தட்டி, ''போடா ராஸ்கல்!'' என்று உதட்டைக் குவித்து முத்தமிடுவது போல அபிநயித்துவிட்டுப் புறப்பட்டாள். அலுவலகப் படிகள் இறங்கி வெளியே வந்து, மரத்தடி நிழல் மாருதியைக் கதவு திறந்து உட்கார்ந்துகொண்டாள். நீண்ட தாகப் பெருமூச்சுவிட்டாள்.செல்போன் எடுத்து ஆராய்ந்து அழுத்தி, ''ஹாய்... ஒரு சின்ன சந்தேகம். மெயில் ஒண்ணை தப்பா டெலிட் பண்ணிட்டேன். ட்ராஷ் கேனையும் எம்ப்ட்டி பண்ணிட்டேன். அந்த மெயிலை மறுபடி எடுக்கணும்னா முடியுமா?'' என்றாள். நிகில் தன் தொலைபேசியைத் தொட்டு, ''மூர்த்தி... ஒரு டவுட்! மெயில் ஒண்ணைத் தப்பா டெலிட் பண்ணிட்டேன். ட்ராஷ் கேனையும் எம்ப்ட்டி பண்ணிட் டேன். அந்த மெயில் எனக்கு வேணும். எப்படி எடுக்கறது? ஏதாவது வழி இருக்கா?'' என்றான். |
0 comments:
கருத்துரையிடுக