வெள்ளி, 31 ஜூலை, 2009

மனைவி என்பவள்!!!!!!!




ஆபீஸ் புறப்படும்போது ஷு, சாக்ஸ் எடுத்து வைப்பதில் இருந்து, நடு இரவில் கரன்ட் கட்டானாலும் அலுப்புப் பார்க்காமல் எழுந்து விசிறிவிடும் வரை... ஆசை ஆசையாக பணிவிடைகள் பல செய்தாலும் மனைவி சுமதியை சற்று மதிப்புக் குறைவாகவே பார்ப்பான் ரகு.

ரகுவுக்கும் சுமதிக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. சுமதி, சின்ன டவுன் ஒன்றில் படித்தவள். திருமணத்துக்குப் பிறகுதான் சென்னை வந்திருக்கிறாள். ரகுவும் சென்னையில் பிறந்தவன் அல்ல. வேலை காரணமாக கடந்த பத்து வருடங்களாக சென்னையைப் பழகிக் கொண்டவன். பார்க்க கொஞ்சம் மாடர்னாகத் தெரிவான்.

சுமதியை நேரில் பார்த்து சம்மதம் சொல்லித்தான் திருமணம் செய்துகொண்டான். இருந்தாலும் இப்போதெல்லாம் 'தன் பர்சனாலிட்டிக்கு ஏற்றவளாக சுமதி இல்லையோ' என மனதுக்குள் சில நேரம் ஒரு நினைப்பு வந்துபோகிறது அவனுக்கு.

சுமதிக்கு திருமணத்துக்கு முதல் நாள்தான் பியூட்டிபார்லரே அறிமுகம். பெரும்பாலும் புடவை கட்டி பழகியவள். ரகு கேட்டுக் கொண்டால் சுடிதார் அணிவாள். ரகுவுக்கோ ஆபீஸ் நண்பர்கள் எல்லாம் அவரவர் மனைவியை ஜீன்ஸ் பேன்ட், குர்தா காஸ்ட்யூமில், இரண்டு பக்கமும் கால் போட்டு அழைத்து வரும் அந்த பைக் சவாரியை பார்த்து ஏக்கமோ ஏக்கம். சுமதியிடமும் மெள்ள சொல்லிப் பார்த்தான். "பேன்ட் போட்டு, அதுவும் ரெண்டு பக்கம் கால் போட்டு உக்காரணுமா? உங்ககூடதான் வர்றேன்னாலும் ரோட்டுல எல்லாரும் பார்க்க மாட்டாங்களா..? நான் மாட்டேன்பா'' என்று மறுத்துவிட்டாள்.

"இப்படி நீளமா ஜடை பின்னாம, ஷார்ட்டா யூ கட் பண்ணிக்கோ.''

"ஊருல எல்லாரும் என் முடியைப் பார்த்து ஆசைப்படறாங்க.. அதை எதுக்கு மாமா வெட்டணும்?''

"நான் 5.10... நீ 5.2. ஹய்யோ... ஹீல்ஸாச்சும் போட்டுக்கக் கூடாதா?''

"அத போட்டுட்டு நடக்கத் தெரியாதே. ஏற்கெனவே ஒரு தடவை ஸ்லிப் ஆயிருக்கேன்.''

"இது என்ன 'தொளதொள'னு சுடிதார். டைட்டா தைச்சுப் போடத் தெரியாதா?''

"உடம்பைப் பிடிக்கற மாதிரி சுடிதார் போடுறதெல்லாம் எனக்குப் பிடிக்காதுப்பா..!''

- இப்படியாக ரகுவின் எதிர்பார்ப்புகளும் சுமதியின் நழுவல்களும் நீண்டன.

விளைவு.. 'அவசரப்பட்டுட்டோமோ... சென்னையில வளர்ந்த பொண்ணாப் பார்த்து கல்யாணம் செஞ்சிருக்கலாமோ?' என்று மனதுக்குள் தடுமாறினான் ரகு.

அவனுடைய மேனேஜர் ஸ்ரீராம், அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தவர். அவருடைய மனைவி சென்னையில் படித்து வளர்ந்தவர். "ரகு... ஸாரி, உங்க கல்யாணத்துக்கு வர முடியல. நாளைக்கு சாயங்காலம் நானும் என் வொய்ஃபும் உங்க வீட்டுக்கு வர்றோம். லைட்டா ஏதாச்சும் டின்னர் போதும். செய்வாங்கதானே உங்க மனைவி..?''

- ஸ்ரீராம் கேட்டபோது ரகுவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் பொங்கினாலும், இவர்களுக்கு முன் பெருமையுடன் நிறுத்துமளவுக்கு சுமதி இல்லையே என்று தயங்கினான். இருந்தாலும் மறுக்கமுடியாமல், "வித் பிளஷர் சார்'' என்றான்.

ஸ்ரீராம் தம்பதிக்காக காத்திருந்த நேரத்தில், ஒரு தட்டில் ஜாக்கெட், குங்குமம், மஞ்சள், வெற்றிலை, பாக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சுமதி.

"எதுக்கு இது..?'' - வெறுப்பாகக் கேட்டான் ரகு.

"முதல் முதலா உங்க மேனேஜர் வொய்ஃபோட வீட்டுக்கு வர்றாங்க. அவங்களுக்கு வச்சு கொடுக்கத்தான்..."

தலையில் அடித்துக் கொண்டான் ரகு. "அதெல்லாம் வேணாம். அவங்க உன்ன மாதிரி ஜாக்கெட் எல்லாம் போட மாட்டாங்க. எப்பவும் மாடர்ன் டிரெஸ்தான்'' - சுமதியை சுருக்கெனக் குத்தினான்.

"ஜாக்கெட் போடுறாங்களோ இல்லையோ, வர்றவங்களுக்கு வெச்சு கொடுக்கணும்கிறது சம்பிரதாயம்.''

"சொன்னா கேளு. என்னைக் கேவலப்படுத்தாத...''

'க்க்க்ர்ர்ர்ர்ர்....'

காலிங் பெல் அழைப்பு இருவரின் வாதத்துக்கு பிரேக் போட்டது.

'ஹாய்', 'பா....ய்' என்றே பழக்கப்பட்டுவிட்ட மானேஜர் தம்பதிக்கு... இரண்டு கையையும் சேர்த்து வணக்கம் சொல்லி சுமதி வரவேற்றது, பூரி, புலாவ் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்கு இட்லி, வடை செய்திருந்தது, மருந்துக்குக்கூட ஒரு சில வார்த்தைகளாவது ஆங்கிலத்தில் உரையாடாதது, கிளம்பும்போது விடாமல் அந்த ஜாக்கெட் அயிட்டங்களை தட்டில் வைத்துக் கொடுத்தனுப்பியது என... எல்லாவற்றையுமே ரகு தலைகுனிவாக உணர்ந்தான். மறுநாள் அலுவலகத்தில் நிறைந்த சங்கடங்களுடன் மானேஜர் ஸ்ரீராமை எதிர் கொண்டான்.

"என்ன சொன்னாங்க என் சிஸ்டர்'' என்றார் ஸ்ரீராம்.
சற்றே தடுமாறினான் ரகு.

"அதாங்க.. உங்க வொய்ஃப்! நேத்து எங்களை அவ்ளோ உரிமையா அண்ணா, அண்ணினு வாய் நிறைய உறவு சொல்லி கூப்பிட்டாங்க. அவங்க வீட்டைப் பத்தி அவளோ அழகா பேசினாங்க. ரொம்ப ஹோம்லி. எல்லாத்தையும்விட, நாங்க புறப்படும்போது அவங்க அன்பா கொடுத்த அந்த தாம்பூலம்... வெரி நைஸ்! என் வொய்ஃப்கூட அவங்களோட வேர்க்கடலை சட்னிக்கு ஃப்ளாட் ஆயிட்டா. யூ ஆர் வெரி லக்கி ரகு'' என்றபடியே இறுக்கமாக கைகொடுத்து ரகுவை அனுப்பினார் ஸ்ரீராம்.

தன் ஸீட்டில் வந்து அமர்ந்தவனுக்கு அந்த 'ஹோம்லி' சுமதியின் அழகு புலப்படத் தொடங்கியது; அசுர வேகத்தில் அது அவன் நெஞ்சமெல்லாம் படர்ந்தது. மனதுக்குள் அவளை ஒருமுறை ஆரத்தழுவினான். பத்தவில்லை. ஆபீஸ் எப்போது முடியும் என வாட்சையே பார்த்துக் கிடந்தான்!


வெள்ளி, 24 ஜூலை, 2009

ஆண்கள் ரசிக்கும் பெண்களின் 10




10. அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாய் அருகே வந்து உரசிக்கொண்டு வழிந்துகொண்டு 'திட்டக்கூடாது.. திட்டமாட்டீங்கன்னா ஒண்ணு சொல்றேன்..' என்றபடியே சிரிக்கும் சிரிப்பு.

09. வீட்டுக்கு வந்த நண்பர்களுடன் வெளியே கெத்தாக கிளம்பும் போது அவர்களுக்குத் தெரியாமல் 'போனா.. தொலைச்சுப்புடுவேன்' என்று மிரட்டும் முகபாவம்.

08. அரிதான இரவு நேர பால்கனி தருணங்களில் நீண்ட கெஞ்சல்களுக்குப்பிறகு கிடைக்கும் ஒற்றை சிகரெட்டுக்கான அனுமதி.

07. 'மையி வெச்சா எனக்கு நல்லாருக்குமாங்க?' பதிலை எதிர்பாராமல் ஒரு சிறுமியின் ஆசையோடு மெலிதாக மை தீற்றிக்கொள்ளும் கண்கள்.

06. 'எல்லா மண்ணாங்கட்டியும் நினைவிலிருக்குது, இத்தன பூக்கடை கண்ணு முன்னாடி இருந்தும் இந்தப் பூ வாங்குறது மட்டும் எப்படி மறந்துபோகுது இந்த மரமண்டைக்கு?' என்று அரற்றும் கோபம்.

05. ஸ்கேல் வைத்து அளந்து மடித்ததைப்போன்ற படுகச்சிதமான உன் முந்தானை மடிப்புகள்.

04. கடும் சண்டைக்குப் பின்வரும் இரவு உணவின் போது சுவற்றைப் பார்த்தவாறே நீ கேட்கும் 'மிளகாப்பொடி போதுமா? சட்னி அரைக்கணுமா?' மிளகாய் வார்த்தைகள்.

03. பட்டுச்சேலை வாங்கப்போனாலும், பிளாஸ்டிக் குடம் வாங்கப்போனாலும் கடைக்காரர்களை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நீ செய்யும் ஒரே மாதிரியான டார்ச்சர்.

02. 'ஒழுங்கா கம்ப்யூட்டர் கத்துக்கோ' வேலைகள் முடிந்து படுக்கும் நேரங்களில் வலுவாய் பிடித்து உட்கார வைத்து கற்றுத்தரும்போது, 'ப்ளீஸ்ங்க, நாளைக்கு பாக்கலாமே.. ஆவ்வ்வ்..' என்று வெளியாகும் கொட்டாவி.

01. ஸ்டிக்கர் பொட்டுகளே எப்போதும் உன்னை அழகு செய்துகொண்டிருந்தாலும் எப்போதாவது ஸ்டிக்கருக்குக் கீழே நீ தீற்றிக்கொள்ளும் குங்குமம்.

செவ்வாய், 21 ஜூலை, 2009

புதையாது காதல்!!

இதயம் நுழைந்து
என்னைத் திருடும் வரை
துணிவோடுதானே இருந்தாய்..?

போகப் போக
பொருளாதார வீழ்ச்சி எனும்
புதைகுழியில் நீ வீழ்ந்தபோது
நம் காதலையும் சேர்த்து
ஏன் புதைத்தாய்?

ஒவ்வொரு முறையும்
நான் மாறாத காதலெனும்
கயிறு கொண்டு
உன்னைத் தூக்கும்போதெல்லாம்...
அவநம்பிக்கைச் சகதியில்
நீயாகவே விழுகிறாய்!

விரக்தியும் சலிப்புமாய்
குழிக்குள் நீயும்...
மீட்டுவிடும் உறுதியோடு
வெளிப்புறத்தில் நானுமென
தொடர்கிறது
ஒரு தாம்பத்யப் போராட்டம்!

உன் பயத்தை
வாழ்க்கை தந்தது...
என் துணிவை
காதல் தந்தது...
நிச்சயம் ஜெயிக்கும் காதல்!!

வெள்ளி, 10 ஜூலை, 2009

அன்பே வா









ஒரு பார்வை பார்க்கிறாய்
புதிதாய் நான் பூக்கிறேன்
இதயம் இடம் மாறுதே

இது காதலா
....................................
நிலவோடு தேய்கிறேன்
நினைவாலே கரைகிறேன்
சுகமான வேதனை இது காதலா........................
எங்கேயோ எங்கோயோ விண்மின்கள் சிதறுதே

கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே ..
காதல் வந்து போவதேன்
என்ன இது என்ன இது ..

வானவில்லில் வானம் ரெண்டு கூடுதே
தீண்டினால் வானிலே மேகமாய் அலைகிறேன்
நீங்கினால் தூரத்தில் புள்ளியாய் தொலைகிறேன்

நில்லென்றால் நில்லாமல்
ஏனென்று கேளாமல்
ஏதேதோ செய்கிறாய் ஏனடி!

அன்பே வா அன்பே வா அன்பே வா ஆ .............

என்ன சொல்லி என்ன சொல்லி காதல் அதை உன்னிடத்தில் காட்டுவேன் சத்தமின்றி சத்தமின்றி மௌனமாய் நெஞ்சுக்குள்ளே பூட்டுவேன்
கவிதைகள் எழுதிட வார்த்தைகள் தேடினேன்
உன் பெயர் எழுதினால் கவிதையாய் பாடினேன்

என் உள்ளே என் உள்ளே
உன் கண்ணின் மின்சாரம்
ஏதேதோ செய்யுதே
ஏனடி
அன்பே வா
அன்பே வா
அன்பே வா
வா


More Details
watch on vijay tv monday- thursday 7.30pm(india)

சனி, 4 ஜூலை, 2009

காதல் ரகசியம்


சுமேஷூக்கு ஆபீஸில் வேலையே ஓடவில்லை. வெண்ணிலாவை இரண்டு நாளைக்கு முன் கண்மூடித்தனமாகத் திட்டியதும்.. அவள் அழுகையை நடிப்பென்று விமர்சித்ததும்.. அதனால் இந்த இரண்டு நாட்களாக அவளிடம் பேச்சு வார்த்தையே அற்றுப் போயிருப்பதும்.. அவள் தயார் செய்து வைக்கும் டிபன் பாக்ஸை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் யந்திரம் போல கிளம்பி வருவதும்.. மாறி மாறி அவனை வதைத்துக் கொண்டிருந்தன.

வெண்ணிலாவுக்கு 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்பதுதான் வேதம். தன்னைக் கொட்டிய தேளைக் கூட அடிக்க விட மாட்டாள். 'தூரத்துல எங்கயாவது கொண்டு போய் விட்டுடலாமே' என்று கெஞ்சுவாள். பிறந்த வீட்டில், இருபது லவ் பேர்ட்ஸூம், ஒரு கிளியும், மூன்று பூனைக் குட்டிகளும் வளர்த்தவள். தெருநாய்களுக்கெல்லாம் அன்னை தெரசாவாகத் தெரிந்தவள். இன்றும் அந்த அன்பு தொடர்கிறது. ஆனால், சுமேஷூக்கு இதெல்லாம் பிடிக்காது என்பதால் வீட்டுக்குள் எந்த ஜீவராசியும் பிரவேசிப்பதில்லை.

ஒன்றுமில்லை.. அன்று பக்கத்து வீட்டு நாய்க்குட்டியை வெண்ணிலாவின் கையில் பார்த்தவுடன்தான் சுமேஷூக்குள் எழுந்தது அந்தப் பேய்க் கோபம். ''நீ எக்கேடும் கெட்டுப் போ.. வீட்டுல மூணு வயசுல ஒரு குழந்தை இருக்கான்ல..? இந்த சனியன் அவனைக் கடிச்சு வச்சா என்ன பண்றது..?'' என்று ஆரம்பித்தவன், ''மிருகங்களோட பழகுறவளை மிருக ஜென்மம்னுதான் சொல்லணும்.. நீயெல்லாம் ஒரு மிருகத்தையே கட்டிக்கிட்டிருக்க வேண்டியதுதானே'' என்று தீ கக்க ஆரம்பித்தான். எல்லாம் ஆபீஸ் டென்ஷனின் பக்க விளைவுகள்தான். வீட்டுக்கு வீடு வாசப்படி!

''ச்சே.. என்ன மனுஷன் நான்..? கல்யாணமாகி அஞ்சு வருஷம் கழிச்சும் சொந்தப் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கலையே.. அவ எப்பவுமே இப்படித்தான்னு தெரியுமே.. அதுக்குப் போய் அவளை..'' அவன் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. 'இன்னிக்காவது நானே போன் பண்ணி மன்னிப்புக் கேட்டுடணும்..' விறுவிறுவென செல்போனை எடுத்தவன், வெண்ணிலாவின் எண்ணைத் தேடினான். வசந்த்.. வெங்கட்.. விஜய்.. என்ன இது? வெண்ணிலாவின் பெயரையே காணவில்லை!

'எப்பிடி..? ஒரு வேளை நான் தூங்கிட்டிருந்தப்போ அவளே எடுத்து அழிச்சிருப்பாளோ? அந்த அளவுக்கா அவளைக் காயப்படுத்திட்டோம்?' - சுமேஷூக்குக் குற்றவுணர்ச்சி தாங்க முடியவில்லை. 'ஒருவேளை, அந்த நம்பரை மனசுல வச்சிருக்கானானு டெஸ்ட் பண்றாளோ? இப்ப என்ன பண்றது?' - யோசனைகள் ஓடிக் கொண்டிருக்கும்போதே அவன் செல்போன் ஒலித்தது.

அழைப்பவரின் பெயர் வித்தியாசமாக, 'உன் செல்லம் பாவமில்ல..?' என்று நீளமாக வந்தது. எடுத்தான். மறுமுனையில் ''சாப்ட்டீங்களா?'' என்றாள் வெண்ணிலா. கள்ளி! சுமேஷூக்குத் தெரியாமல் அவன் போனை எடுத்து தன் பெயரைத்தான் இப்படி மாற்றியிருக்கிறாள். ''ஸாரி, சுமி! இனிமே நான் நாய்க்குட்டி, பூனைக் குட்டியையெல்லாம் தொடவே மாட்டேன்'' - அவளே தொடர்ந்து பேசினாள்.

'பாவி, மன்னிப்பு கேட்கும் விஷயத்தில் கூட தன்னை முந்திக் கொள்கிறாளே.. இந்த அழகான ராட்சஸி!' என்று பரவசம் பாய்ந்தது அவனுக்குள். 'கடவுளே.. இது பெட்ரூமா இருக்கக் கூடாதா' என்று மனசுக்குள் காட்டுக் கத்தல் கத்தினான். உடனடியாக ஆபீஸில் பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தான் சுமேஷ். அடுத்த நாள் காலையும் ஒரு மணி நேரம் பர்மிஷன் போட வேண்டியது வந்தது!

வெண்ணிலா எப்போதுமே இப்படித்தான். கல்யாணம் ஆனதிலிருந்து சுமேஷின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரொமான்ஸ் குறையாமல் வைத்திருந்தாள். அவனுக்குப் பிடித்தவற்றை குறித்து வைத்துக் கொண்டு சமைப்பது, ஆட்டோமொபைல் கம்பெனியில் மேலாளராக இருக்கும் அவனுக்கு, புதிதாக அறிமுகமாகவிருக்கிற கார்கள் பற்றிய செய்தியை வெட்டி எடுத்துக் கொடுப்பது.. என்று தனது அன்பால் ஒவ்வொரு நாளையுமே அசத்தி விடுவாள்.

இத்தனை செய்கிறவளுக்கு சுமேஷ் என்னதான் பரிசு தருவான்? வெறும் புடவையும் நகையுமா? இல்லை! வித்தியாசமாக ஒன்று தர ஆசைப்பட்டான். அதற்காகத்தான் ஒரு நாள் திட்டமிட்டான்.

''டி.நகர் வரை வர்றேல்ல.. அப்பிடியே ஒரு ஆட்டோ எடுத்துட்டு என் ஆபீஸ்க்கு வந்திடு. ரெண்டு பேருமா சேர்ந்து வீட்டுக்குப் போய்டலாம்'' என்று காலையிலேயே அவன் கட்டளையிட, அவள் குழந்தையும் ஷாப்பிங் கவர்களுமாக அங்கு போய்ச் சேர்ந்தாள்.

வாசல் வரை வந்து உள்ளே அழைத்துப் போனவன், தன் அறைக்குள் தன் ஸீட்டின் மீது வெண்ணிலாவை உட்கார வைத்து அழகு பார்த்தான். அந்த இருக்கைக்குப் பக்கத்திலேயே ஒரு கண்ணாடி ஜன்னல், 'அது மூன்றாவது மாடி' என்பதை அறிவித்தது. அந்த வளாகத்திலேயே உள்ள மாமரம் ஒன்று தன் கிளைகளால் அந்த ஜன்னலை வருடியிருந்தது. ''குட்டிப் பையா.. மாங்கா பாரு..'' என்று ஜன்னலைக் காட்டி, குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதில் மும்முரமானாள் வெண்ணிலா.

''நிலா.. அந்த டிராவைத் திறயேன்'' என்றான் சுமேஷ்.

திறந்தால் அதற்குள் கவர் பிரித்த ஒரு பாப்கார்ன் பாக்கெட் இருந்தது. அதிலிருந்து ஒன்றிரண்டு பாப்கார்ன்களை எடுத்தான். கண்ணாடி ஜன்னலை லேசாகத் திறந்து, சற்று நீண்டிருக்கும் ஸ்லாபில் அந்த பாப்கார்னை வைத்து மூடினான்.

''வெய்ட் பண்ணு.. சில விருந்தாளிங்க வருவாங்க'' என்று அவன் சொல்லி முடிக்கும் முன், பெரிய்ய்ய்ய வாலை ஆட்டியபடி ஓடி வந்தார்கள் அந்த விருந்தாளிகள். பாப்கார்னை தங்கள் முன்னங்கால்களால் எடுத்துச் சாப்பிட்ட அந்தச் சின்னஞ்சிறிய அணில்களை.. திறந்த வாயும் விரிந்த கண்களுமாகப் பார்த்த நிலா சந்தோஷத்தில் தன்னை மறந்து குதித்தே விட்டாள்.

வீடு திரும்புகிற வழியெல்லாம் அணில் பேச்சுத்தான்! ''ச்சே! என்ன அழகு சுமி..! ஒருமுறை டி.வி-யில மட்டும்தான் அணிலை இவ்வளவு க்ளோஸா பார்த்திருக்கேன். ச்சோ ச்வீட்.. ஐ லவ்யூடா'' எனச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். தாமதமாகத்தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது.

'சுமி.. உங்களுக்குத்தான் இந்த ஸில்லி ஜீவன்களைப் பிடிக்காதே.. இப்படி பாப்கார்ன் போட்டு ரசிக்கிறதெல்லாம் எப்போத்துல இருந்து?'' என்றாள் அவள். பைக்கைக் கொஞ்சம் ஸ்லோ செய்து, ஹெல்மெட் கண்ணாடியை எடுத்து விட்டுக் கொண்டு அவன் சத்தமாக பதில் சொன்னான்.. ''கல்யாணம் ஆனதுல இருந்து!''

''கடவுளே இது பெட்ரூமா இருக்கக் கூடாதா?'' - வாய்விட்டே சொல்லிவிட்டாள் வெண்ணிலா!!

.


வெள்ளி, 3 ஜூலை, 2009