இதயம் நுழைந்து என்னைத் திருடும் வரை துணிவோடுதானே இருந்தாய்..?போகப் போக பொருளாதார வீழ்ச்சி எனும் புதைகுழியில் நீ வீழ்ந்தபோது நம் காதலையும் சேர்த்து ஏன் புதைத்தாய்? ஒவ்வொரு முறையும் நான் மாறாத காதலெனும் கயிறு கொண்டு உன்னைத் தூக்கும்போதெல்லாம்... அவநம்பிக்கைச் சகதியில் நீயாகவே விழுகிறாய்! விரக்தியும் சலிப்புமாய் குழிக்குள் நீயும்... மீட்டுவிடும் உறுதியோடு வெளிப்புறத்தில் நானுமென தொடர்கிறது ஒரு தாம்பத்யப் போராட்டம்! உன் பயத்தை வாழ்க்கை தந்தது... என் துணிவை காதல் தந்தது... நிச்சயம் ஜெயிக்கும் காதல்!! |
2 comments:
ஆஹா,
மிஸ்டர் ரைட் - ரைட்டாத்தான் சொல்லியிருக்கீங்க. எளிமையாய்ப் புரிகின்றன வரிகள்.
good one.
கருத்துரையிடுக