வெள்ளி, 23 அக்டோபர், 2009

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்




''ஒரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவர் எந்த காரியம் செய்தாலும் தன் மனைவியின் கருத்தைக் கேட்டே செய்வார். ஒரு நாள், 'நாம் மட்டும்தான் இப்படி மனைவியின் பேச்சைக் கேட்கிறோமா... அல்லது அமைச்சரவையில் உள்ள மற்றவர்களும் கேட்டு நடக்கிறார்களா..?' என்று அரசருக்கு சந்தேகம். அமைச்சர்களிடமே கேட்டுவிட்டார். 'நாங்களும் அரசர் வழியில் மனைவியரின் பேச்சைக் கேட்டே நடக்கிறோம்’ என்றார்கள் அத்தனை பேரும்.

அடுத்து, 'இந்த விஷயத்தில் குடி மக்கள் எப்படி?' என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்த அரசர் ஊரையே கூட்டி, 'மனைவி பேச்சைக் கேட்பவர்கள் எல்லாம் வலதுபுறமும்... கேட்காதவர்கள் இடதுபுறமுமாக செல்லுங்கள்' என்றார். ஒருவர் மட்டும் இடதுபுறமாகச் செல்ல... 'நீங்கள் ஒருவர் மட்டும்தான் மனைவியின் பேச்சைக் கேட்காதவர். பிடியுங்கள் பொற்கிழி பரிசை' என்று நீட்டினார் அரசர்.

உடனே, 'மனைவியின் பேச்சைக் கேட்காமல் வாங்கமாட்டேன்' என்று அவர் சொல்ல, அரசருக்கு கோபம் வந்துவிட்டது. 'பிறகு எதற்காக இடதுபுறமாக சென்றீர்கள்?’ என்று கேட்டார்.

'வீட்டிலிருந்து புறப்பட்டபோது, கூட்டத்தோடு கூட்டமாகச் செல்லாதீர்கள். தனியாக நில்லுங்கள் என்று என் மனைவிதான் சொல்லியனுப்பினார்' என்று பதில் தந்தார் அந்த நபர்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்ற உண்மையை உணர்த்தத்தான் இந்தக் கதையைச் சொல்கிறேன்.

ஆகையால் எல்லோரும் அவங்க அவங்க மனைவி சொல்றத கேட்டு நடக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது