வியாழன், 24 டிசம்பர், 2009

சினிமா விமர்சனம்--வேட்டைக்காரன்








பாட்ஷா + பகவதி + திருப்பாச்சி +சத்யம் = வேட்டைக்காரன்.

நான்காவது அட்டெம்ப்ட்டில் பிளஸ் டூ பாஸ் செய்யும் தூத்துக்குடி மாணவன் ரவியாக விஜய் (அடேங்கப்பா!). நேர்மையான என்கவுன்டர் போலீஸ் ஸ்ரீஹரியைப்போல போலீஸ் ஆக வேண்டும் என்பது அவரது கனவு. சென்னை கல்லூரிக்குப் படிக்க வந்த இடத்தில் ரவுடிகளின் அட்டகாசம் (விஜய் படக் கதை வந்துவிட்டதா?). ஊரையே உலையில் அடித்துப் போடு கிறார்கள் ஒரு அப்பா, மகன் கம் வில்லன் கோஷ்டி. விஜய் அவர்களோடு மோதுகிற சூழல் வருகிறது. ''கிரி மினலுக்கு போலீஸ் வரணும். மிருகத் துக்கு வேட்டைக்காரன்தான் வரணும்'' என்று தொடை தட்டுகிறார் விஜய் (டைட்டில் வந்துவிட்டதா?). சவால், சவடால், டாடா சுமோ, கத்தி, ரத்தம், இத்யாதி... இத்யாதிதான் மீதிக் கதை.

பேரரசு டைப் கதை. இம்மி மாறாமல் விஜய் புகழ் பாடி ஆக்ஷன் உறுமி வாசித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாபுசிவன். அறிந்த காட்சிகள், தெரிந்த திருப்பங்கள் எனப் படத்தில் எல்லாமே பழசு (டைட்டில் உட்பட!) படத்தில் செம ஃப்ரெஷ் விஜய். காதலில் குழைகிறார். நட்பில் நெகிழ்கிறார். ஆக்ஷ னில் உறுமுகிறார். ஆனால், அலுத்துச் சலித்த அதே ரவுடி வேட்டையை எத்தனை முறை பார்ப்பது? போதாக்குறைக்கு விஜய் நடித்த பல படங்களின் ஸீன்களே இதில் ரிப்பீட். ஆக்ஷன் போர்ஷன் முழுக்க விஜய் நடக்கிறார், பறக்கிறார், சட்டையை உதறுகிறார், பஞ்ச் அடிக்கிறார், சவால்விடுகிறார்... றார்...

சின்ன போர்ஷனில் பெரிய பொண்ணு... அனுஷ்கா! முதலில் காதலிக்கிறார். பிறகு, ஆரோக்கி யமான இடைவெளிவிட்டு மீண்டும் காதலிக்கிறார். அப்புறம் ஹீரோயினை வில்லன்கள் கடத்த வேண் டுமே? எல்லாம் இருக்கிறது. அழகான அனுஷ்கா இதில் ஆன்ட்டி மாதிரி தெரிகிறாரே... என்ன பிரச்னை?

சாயாஜி ஷிண்டேவுக்கு 32-வது தடவையாக வில்ல போலீஸ் வேடம். கடைசியில் வழக்கம்போலத் திருந்துகிறார். சாயாஜியை வில்லன் பழி வாங்க வேண்டுமே? அவரது சின்னவீட்டை அப்படியே அலேக் பண்ணுகிறார். பிரமாதம்... 'கீப்' இட் அப்!

படத்தின் மூன்று வில்லன்களில் சலீம் கோஸ் மட்டுமே அடக்கி வாசிக்கிறார். மற்றவர்கள் ஸ்பீக்கருக்குப் பக்கத்தில் நின்று பேசுவது மாதிரி கத்தித் தீர்க்கிறார்கள். படத்தில் வில்லன்களை இவ்வளவு சோப்ளாங்கி ஆக்கியிருக்க வேண்டாம். எக்கச்சக்க பில்டப்கள் கொடுத்து அறிமுகம் ஆகும் படா வில்லன்கள் 'அவனைத் தடுக்க முடியாது' என்று விஜய் முன் வாலன்ட்டரி கைப்புள்ள ஆகிறார்கள். கொசு மாதிரி பொசுக் என்று உயிரை விடுகிறார்கள். இருப்பதில் கொஞ்சமாவது ஆறுதல் தருவது சத்யன்தான். காதலித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணும் இடத்தில் ரசிக்கவைக்கிறார்.

வேட்டை படத்தில் லாஜிக்கைக் கோட்டைவிட்டு விட்டார்கள். தமிழ்நாட்டுக்கே பிரபலமான என் கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் குடும்பமே கொல்லப் படுவதும், அவருக்குப் பார்வை பறிபோவதும் யாருக்கும் தெரியாதாம்! லூசுத்தனமாக நண்பனின் கடையையே தீவைத்துக் கொளுத்துகிறார் சலீம் கோஸ். எம்.எல்.ஏ-கூட இல்லாத சலீம் கோஸ் நினைத்த அன்றே மந்திரியாகப் (?!) பொறுப்பேற்கிறார். விஜய் ஊரையே கலக்கிக்கொண்டு இருக்க அவரைப் பற்றித் தெரியாமல் தேடிக்கொண்டு இருக்கிறார் அனுஷ்கா.

கேமராமேன் கோபிநாத் கேமராவின் வேலை எல்லாம் விஜய்யைப் பல கோணங்களில் சுற்றிச் சுழல்வதுதான். விஜய் ஆண்டனியின் இசையில் அனைத்துப் பாடல்களும் தாளம் போடவைக் கின்றன. குறிப்பாக 'கரிகாலன் காலைப் போல' பாடல் மெலடியும் துள்ளல் இசையும் கலந்த அழகிய கலவை. வழக்கமாக விஜய் நடனங்களில் தெரியும் எனர்ஜியான துள்ளல் வேட்டைக்காரனில் இல்லையே... ஏங்ணா?

பார்த்துச் சலித்த பழைய புலி. அதனாலேயே உறுமவதெல்லாம் இருமுவது மாதிரி கேட்கிறது!!


Thanks to Viktan

1 comments:

அன்புடன் நான் சொன்னது…

பார்த்துச் சலித்த பழைய புலி. அதனாலேயே உறுமவதெல்லாம் இருமுவது மாதிரி கேட்கிறது!!

சரியாய் சொன்னிங்க.... விமர்சனம் நல்லாயிருக்குங்க.